Friday, 25 December 2015

Why Anma Yoga?


உயிர்களின் மகத்துவம்  பிரம்மத்திற்கு  ஈடானது. மாற்றம் என்பதே புனிதம்
       பிரபஞ்சத்தில் வாழும் உயிர்கள், பேரண்ட  ஒழுக்கநியதிக்கு உட்பட்டு வாழ,  பிறர்நலம் பேணி தவப்புருசர்கள் அருளிய யோகக்கலை என்னும் அமுதத்தை, இன்றைய மனிதக்குலம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மதம்சாரா அறிவியல் பேரறிவுடன் ஆன்ம யோகா மையம் தனிநபர்களுக்கு ஏற்றவாறு தகுந்த முறையில் சுவாசப் பயிற்சியும், முத்திரை மகத்துவமும் கற்றுத்தருகிறது. நாட்பட்ட நோய்களிலிருந்து குணம்பெறவும், மனஅமைதி பெறவும்  குருவின் மேற்பார்வையில் நன்குபயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்றுத்தரப்படும் யோகக்கலை, மிகச்சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
       இன்று தவறான வாழ்க்கை முறை, உணவு முறையைப் பின்பற்றுவதால் வருகின்ற நீரிழிவு, ஆஸ்துமா, சருமநோய், முடக்குவாதம், கீல்வாதம், நாள்பட்ட தலைவலி, ஜீரணக் கோளாறு, நாளமில்லா சுரப்பி குறைபாடு, பெண்களின் மாதவிடாய் பிரச்சினை, உடல் பருமன், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், புகையிலை மற்றும் மது பழக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு போன்ற பல நோய்களுக்கு இங்கு தீர்வு அளிக்கப்படுகிறது. உணவு உண்ணும் முறை பற்றிய விழிப்புணர்வு அளிப்பது சிறப்பம்சம்.

Tuesday, 31 January 2012

Anma Yoga - Come and Live Yoga

ஆன்ம யோகா - வாருங்கள், யோக நிலையில் வாழுங்கள் 
ல்லா காலங்களிலும், எல்லா மதங்களுக்கும் எப்போதுமே தேவை அமைதி.
அமைதி சிலருக்கு பிறப்பாலே அமைந்துவிடும்.  பலருக்கு வழிகாட்டுதல் தேவை. 
தனக்குத் தானே அமைதியும், நலமும், பேரறிவும் தரக்கூடிய அற்புதமான கலைதான் யோகக்கலை. 
நமது  உடல் அமைப்பு அனைவருக்கும் ஏற்றதாக இல்லை. வாதம், பித்தம், கபம் என்ற நிலைகளில் அமைந்திருக்கிறது.  உடலுக்கேற்ப பயிற்ச்சிகள் அமைவது மட்டுமே நலம் தரும். ஆன்மா யோகா மையத்தில் அவரவர் உடல் நிலைக்கேற்ப ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் கற்றுத்தரப்படும்.
யோகக்கலை அனைவருக்கும் சென்றுசேரவேண்டும். நீங்கள் நலமும் வளமும் பெறவேண்டும் என்பதே ஆன்மா யோகாவின் ஒரே குறிக்கோள்.

New Year Message From Guruji

ஒன்றிணைவோம்! உளமார மகிழ்வோம்! நன்றே செய்வோம்! வளம்பெறுவோம்!

இதயமுள்ளோரே!
அன்பின் கருமையத்திலிருந்து அனைவரையும் வரவேற்கிறேன்,
கசப்பான, வெறுப்பான, தீமையான இவையனைத்தையும் மறந்திடுவோம்!
எதைத் தேடுகின்றோம்?
அமைதி ஒன்றுதான்,
எதை வேண்டுகின்றோம்?
நலமும், சுகமும்,
எப்போது சந்தோசப்படுகின்றோம்?
சண்டையில்லாமலும், உணவுக்கு அலையாமலும்,
உண்மையாக யாவையும் இருக்கும் போதுதான்
எல்லோரும் பயணத்திலே இருக்கிறோம்,
என்ன செய்வது எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்லி விட்டார்கள்,
இருக்கும் வரை அனுபவிக்க வேண்டுமே!
எதை அனுபவித்து நிறைவு பெற்றீர்கள்?
அரசியல்வாதிகளின் சுயநலம் ஒருபுறம்,
அண்டைநாடுகளின் போர்தூண்டல் ஒருபுறம்,
வானவேடிக்கைப் போன்ற செயற்கைக்கோள்கள்,
வண்ணம் தீட்டிய கைபேசிகள்,
உறவுமுறையில்லா ஒழுக்கக்கேடுகள், கதிர்வீச்சுகள்,
இவற்றின் பேரழுத்தம் நம்மை அமைதியின்மை ஆக்கிவிடுகிறது
அவரவர்கட்கு தோன்றிய அறிவை சந்தையிலே கூறுபோட்டு
வரிந்து கட்டிக்கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறோம்,
இப்படி பல வழிகளிலே துன்பத்தை பலமடங்கு விதைகளாக்கி விட்டோம்.

எப்படியோ... நானும் உங்களுக்கு தத்துவத்தை சொல்ல இது உகந்தநேரம் போலும்
எண்ணுவோம் - காலத்தினும் பன்மடங்கு பயனுள்ள உயர்ந்தவையை!
செயல்படுத்துவோம் - எல்லா உயிர்களும் சுகமும் நலமும் பெற்றுவாழ!
வணங்குவோம் - உண்மையை, பேருண்மையை, பிரபஞ்சத்தை!
ஒன்றிணைவோம் - யாவையும் இச்சணத்தே பலன்தரவே!

ஏமாறாதீர்கள்...
தனியொருவர் சுதந்திரம் பறிக்காதீர்கள்,
மறவாதீர்கள் என்றும் மன்னிப்பை,
துறவாதீர்கள் என்றும் பொறுமையை.

நலம் பெறுவோம் !!!                                                                                                              வளம்பெறுவோம்!!!
~நன்றி~

*(
பொழுதை போக்குவது அல்ல பொழுது போக்கு, பொழுதை பயனுள்ளாத ஆக்குவது)